பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை அடுத்து பிரதமர் மோடி தான் பங்கேற்கும் கூட்டங்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தும், தனது ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் அவர் இன்று காசிபூரில் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியபோது, ‘நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக வாட்ச் மேன் போன்று ஓய்வின்றி உழைத்து வருகிறேன். என்றும் கூறினார்.
இந்நிலையில் அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.