சென்னை மக்களே உஷார்..! கொரோனா நோயாளி தப்பியோட்டம்…!
Corona patient escape
சென்னை:
சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டே வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் தினமும் 800 பேர்களுக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மன நிலை குறித்தும் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த நோயாளிகளில் சிலர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.
இந் நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி ஒருவர் திடீரென தப்பி ஓடிவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீரென அவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர்.