ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
கோயம்பேடு விவகாரம்..! எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கவில்லை!
Koyambedu issue: Minister jayakumar interview
சென்னை:
கோயம்பேடு விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார்.
சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு இடமாற்றம் செய்த விவகாரத்தில் தமிழக அரசு சமயோசிதமாக செயல்பட்டது.
நோய்த்தொற்றுக்கு வியாபாரிகளோ, பொதுமக்களோ காரணம் அல்ல. திமுகவைப் போல் யார் மீதும் பழி போட்டு தப்பிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. சந்தையை விட்டு வெளியேறியே ஆக வேண்டும் என்று வியாபாரிகளின் கழுத்தை நெறிக்க முடியாது.
தலைமைச் செயலாளர் சண்முகம் மனதை திமுக கஷ்டப்படுத்தி உள்ளது. அதிகாரிகளை மிரட்டும் செயலில் ஈடுபடக்கூடாது. அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் செயலில் திட்டமிட்டு சதி செய்கிறது என்றார்.