GeneralRETamil Newsஇந்தியா
சோதனைகளை அதிகப்படுத்துங்கள்…! மாநிலங்களை அலர்ட் செய்த ஐசிஎம்ஆர்!
Increase corona testing says ICMR
டெல்லி:
கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் ஐசிஎம்ஆர் வலியுறுத்தி உள்ளது.
உலகளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,637,901 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகமாக 2,219,119 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் மணி நேரத்தில் புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 14,516 ஆகும்.
தெதடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,95,048 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 375 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர்.
இந் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,89,869 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.