மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு…! அமெரிக்க தூதர் பேட்டி!
USA apologies for damage of Gandhi statue
வாஷிங்டன்:
அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டார். அதை கண்டித்து ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந் நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித் அவர், இந்திய தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதனை இந்திய அரசு கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.