GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
ஊரடங்கை மீறிய பைக் ஆசாமிகள்..! ரூ.8.44 கோடி வசூல் செய்த காவல்துறை!
Two wheeler penalty
சென்னை:
ஊரடங்கு விதிகளை மீறியதாக 8.84 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவசியமின்றி யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 5,53,543 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,33,101 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,18,391 வழக்குகள் பதிவாகி உள்ளன. ரூ.8.84 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.