RETamil Newsஅரசியல்இந்தியா
நாளை குடியரசு தினம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
நாட்டின் விடுதலைக்காக உழைத்து பாடுபட்டு உயிர்நீத்தவர்களை இந்த தருணத்தில் நாம் நினைத்து பார்க்கவேண்டும் என்று குடியரசு தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.
மேலும் இந்த நல்ல தருணத்தில் காந்தி, அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சி பற்றி கூறிய அவர்; டிஜிட்டல் தொடர்பு அளிப்பதில் இந்தியா பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்று அனைத்துத்துறைகளிலும் பெண்கள் பெரும் பங்கு வகிப்பதுடன், தலைமை வகித்தும் வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார்.