RETamil Newsஇந்தியாஉலகம்தமிழ்நாடு
ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வானில் ஏற்பட்ட பிரம்மாண்ட துளை பொதுமக்கள் குழப்பம்
அல் ஐன் என்ற நகரின் வானத்தில் திடீரென ஒரு துளை உருவானதால் பொதுமக்கள் குழப்பத்தில் திக்குமுக்காடினர். பொதுமக்களிடையே ஏற்பட்ட இந்த குழப்பம் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தியது அதாவது இவ்வாறு உருவான இந்த துளை வேறொரு உலகுக்கான வாயிலாக இருக்கலாம் என்று சிந்திக்க தொடங்கினர்.
ஆனால் இவ்வாறு உருவான துளைக்கு விளக்கமளித்துள்ள வானிலை ஆய்வாளர்கள் , மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற நிகழ்வுகள் மக்கள் முன்னே ஏற்படாததால் அவர்கள் அதை ஒரு அதிசய நிகழ்வாக கண்டு வியப்படைகின்றனர்.