fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஏப்ரல் 18ல் மக்களவை தேர்தலுடன் 18தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்!

மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கான  இடைத்தேர்தல்களும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 23 சட்டசபை இடைத்தேர்தலில் 18 சட்டசபைக்கு மட்டும் இடைத்தேர்தல் நடக்கும்.ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ,தவிர்த்து 18 சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.

17வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஏப்ரல் 11இல் தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே 23இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மக்களவை தேர்தலுடன்  சட்டப்பேரவை இடைத்தேர்தல்களும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும்  வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதியே இடைத்தேர்தலும்  நடைபெறவுள்ளது.

தமிழகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தன், திரிபுரா ஆகிய 4 மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அசாம், சட்டீஸ்கரில் 3 கட்டங்களாகவும், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு 4 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close