fbpx
GeneralRETrending Nowஇந்தியா

நாட்டையே உலுக்கிய 9 பேரின் மர்ம மரணம்…! எஸ்ஸான 2 பேர்…! போலீஸ் விசாரணை

Telangana police starts enquiry about 9 murders

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கொர்ரகுண்டா பகுதியில் செயல்படும் சணல் ஆலையில் 20க்கும் அதிகமான வடமாநிலத்தவர் பணிபுரிந்து வந்துள்ளனர். சதீஷ் குமார் என்பவருக்குச் சொந்தமான இந்தத் தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக மூடப்பட்டதால், அவர்கள் அனைவரும் சதிஷ்குமாரின் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், தொழிலாளர்களைப் பார்க்கச் சென்ற சதீஷ்குமார், அங்கிருந்த சில தொழிலாளர்களைக் காணாததால் அருகே உள்ள பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது கிணறு ஒன்றில்  4 பேரின் உடல்கள் மிதப்பதை அவர் கண்டுள்ளார்.

தகவலறிந்த வாரங்கல் போலீஸார், வருவாய்த் துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களை மீட்டனர். அதே கிணற்றிலிருந்து மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட 9 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இறந்தவர்களின் உடல்களில் காயம் இல்லாததால் தற்கொலை வழக்காக இதனைப் பதிவு செய்துள்ளனர். இறந்த 9 பேரில் 3  வயது குழந்தை உட்பட 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இந் நிலையில் அவர்களுடன் பணியாற்றிய மேலும் இரண்டு பேரை காணவில்லை. எனவே இது கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் போலீஸார், இது தொடர்பாக 5 குழுக்கள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close