போக்குவரத்தை தனியார் மயமாக்க அரசு முயற்சி – அதிமுக, பாமக கண்டனம்
சென்னையில் தனியார் மினி பேருந்து இயக்குவது, போக்குவரத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை என அதிமுக, பாமக கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில்புதியதிட்டம்செயல்படுத்தப்படும்எனசட்டப்பேரவையில்அறிவிக்கப்பட்டதுதொ.டர்ந்து, புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தனியார் மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கி.மீ பயணிக்கவும் மற்றும் சேவை உள்ள இடங்களில் 4 கி.மீ இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கி.மீகூடுதலாக இயக்க மினி
பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அரசு போக்குவரத்துகழகங்கள்,பொதுமக்கள்,மினிபேருந்துஉரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் கடந்த ஜூலை 22-ம் தேதி கருத்துகளைக் கேட்டு தமிழக அரசிடம் போக்குவரத்துத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், பிப்ரவரி மாதம்முதல்புதியவிதிகளின்படி சென்னை உள்ளிட்ட இடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியானது.இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி விடுத்தஅறிக்கையில்,‘‘சென்னையில்தனியார்மினிபேருந்துகளைஇயக்கதமிழகஅரசுஅனுமதித்திருப்பதை,போக்குவரத்துக்கழகங்களைதனியார்மயமாக்குவதற்கானஅடுத்தகட்டநடவடிக்கையாகவேபார்க்கவேண்டியுள்ளது.இதுதொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரின் எதிர்ப்பையும் மீறி தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன?சென்னையில்தனியார்பேருந்துகளைஇயக்குவதற்கான உரிமங்கள் எற்கெனவே வழங்கப்பட்டிருந் தால் அது சட்டவிரோதம் ஆகும்.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரும்’’ என தெரிவித்துள்ளார். அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன்விடுத்தஅறிக்கையில்,‘‘அதிமுகஆட்சியில்அரசுசார்பில்மினிபேருந்துகள் இயக்கப்பட்டன.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மினி பேருந்துகளின் இயக்கம் வெகுவாக குறைந்துள்ளதுடன், குக்கிராமங்களில் உள்ளவர்கள் மினி பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மக்களின் நலனைக் கருதி தனியாருக்கு மினி பேருந்துகளை தாரைவார்ப்பதை கண்டிப்பதுடன், நேரடியாக அரசே மினி பேருந்துகளை இயக்க வேண்டும்’’ எனகூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, மினி பேருந்து உரிமையாளர்களிடம் கேட்டபோது, ‘‘போக்குவரத்து சேவையில்லா இடங்களில் பயணிக்கும் தொலைவை 15 கி.மீ ஆகஅதிகரிக்கவேண்டும்.பழையமினிபேருந்துகளுக்குசட்டபாதுகாப்புவழங்கவேண்டும்.இதுமட்டுமின்றி,பெருங்குடியில்பேருந்துகளைஇயக்கஅனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பேருந்துநிலையம்இல்லை.எனவே, பேருந்து நிலையம் இருக்கும் திருவான்மியூர் வரை பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும். பேருந்து நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்றனர். போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிய மினி பேருந்து விரிவாக்க திட்டம் தொடர்பாக அரசு விரைவில் முடிவை வெளியிடும்’’ என்றனர்.