fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகையை அனுமதிக்க முடியாது…! மனு தள்ளுபடி

No special worship on ramzan says highcourt

மதுரை:

ரம்ஜானுக்காக சிறப்பு தொழுகைக்கு அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. மே 25ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையின்போது மக்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்த அரசு தலைமை ஹாஜி அறிவுறுத்தியுள்ளார்.  இந்நிலையில் ரம்ஜான் அன்று மதுரையில் உள்ள மசூதிகளில் 2 மணி நேரம் மட்டும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி அளிக்குமாறு சாகுல் ஹமீது என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த நீதிபதிகள் வழிபாட்டு தலங்களை திறக்கும் முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை சார்ந்தவை. ஆகையால் நிதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து இருக்கிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close