நாளை முழு ஊரடங்கு…! கடைகள் கிடையாது, மக்கள் வெளியில் நடமாட தடை!
Sunday total lockdwon in tamilnadu
சென்னை:
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சில தளர்வுகளுடன், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள், ஆலைகள் செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. கொரோனாவை தடுக்க, இம்மாதம் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும், மாநிலம் முழுதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். கடைகள் எதுவும் திறக்கப்படாது. வாகன போக்குவரத்து இருக்காது. எனவே, மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலே தங்கி இருக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.