சீனாவில் கிழக்கே அமைந்துள்ள யான்செங் என்ற நகரில் அமைந்துள்ள இரசாயன ஆலை ஒன்றில் தீடிரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் வேறு சிலரும் லேசான காயமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்திற்கான காரணத்தை அங்குள்ள அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.