காங். இடைக்கால தலைவராகவே தொடர்வார் சோனியா…! கட்சி தலைமை அறிவிப்பு!
Sonia gandhi lead as Congress president again
டெல்லி:
சோனியா காந்தி காங்கிரஸ் இடைக்கால தலைவராக தொடர்வார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்., தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இந் நிலையில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக காங்., செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி அளித்த பேட்டியில் கூறியதாவது: சோனியாவின் இடைக்கால தலைவர் பதவிக்காலம் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு காங்., தலைவர் பதவி காலியாகிறது என அர்த்தம் இல்லை.
புதிய தலைவரை தேர்வு செய்யும் வழிமுறைகள் சரியான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும். விரைவில் அப்பணிகள் முடிவடையும். அதுவரை காங்., இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார் என்று கூறினார்.