GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும்..! தமிழக அரசு அறிவிப்பு!
Relaxed lockdown for Madurai from today
மதுரை:
மதுரையில் இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
இந்த முடக்கம், ஜூலை 12ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் மதுரையில் ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந் நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் முடிவடைந்த நிலையில், இன்று முதல் வழக்கமான பொதுமுடக்கம் தொடரும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.