fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

கர்நாடக ஆளுநர் தானாக முன்வந்து ராஜினாமா பண்ணவேண்டும் : ராகுல் காந்தி!!!

கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி நேரடியாக ஆதரித்ததை மக்கள் தெரிந்துகொண்டனர்.

எனவே, நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று மோடி பேசி வருவது பொய் என்பதும் அவரே ஊழல்வாதி என்பதும் தெளிவாக புரிகிறது.

பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இனியும் காங்கிரஸ் கட்சி இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்தும். கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என நான் கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close