fbpx
GeneralRETamil Newsஇந்தியா

உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா…! தெலுங்கானா அரசு அதிர்ச்சி

Osmania doctors got corona

ஐதராபாத்:

தெலுங்கானாவில் உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த நாடு முழுவதும் மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் உஸ்மானியா மருத்துவமனையில் பணிபுரியும் 32 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து தெலுங்கானா மருத்துவர்கள் சங்க தலைவர் உமா நாகேந்திர விஷ்ணு கூறியதாவது:

மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு கவனித்து கொண்ட உஸ்மானியா மருத்துவர்கள் 32 பேரை  கொரோனா தாக்கி உள்ளது.

இன்னும் பலருக்கு சோதனை முடிவுகள் வரவில்லை. அதன் முடிவுகள் அடிப்படையில் மேலும் பலருக்கு பாதிப்பு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close