fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு..! அதிரடி காட்டும் புதுச்சேரி!

Nonveg food for corona patients in puducherry

புதுச்சேரி:

புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு, சரியான சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது.

இந் நிலையில், புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க அசைவ உணவு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு  செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுகளை பெற்றுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close