டெல்லியில் சீனர்களுக்கு தங்க அறைகள் தரமாட்டோம்…! ஓட்டல் நிர்வாகங்கள் புது முடிவு!
No accomadation for chineese says delhi hotelians
டெல்லி:
சீனப் பொருட்களை புறக்கணிப்பதுடன், சீனர்கள் தங்குவதற்கு அறை வழங்குவதில்லை என்று டெல்லி ஓட்டல்கள் முடிவு செய்துள்ளன.
லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதையடுத்து, சீனா மீது, நாடு முழுதும், மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துஉள்ளது.
இந்நிலையில், டெல்லி ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என விடுத்துள்ள கோரிக்கையை, நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
ஓட்டல்களில் சீன பொருட்களை பயன்படுத்துவதில்லை என முடிவு செய்துள்ளோம். மேலும், சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தங்குவதற்கு அறை வழங்குவதில்லை எனவும் முடிவு செய்துஉள்ளோம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.