GeneralRETamil NewsTrending Now
வரும் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை…! இந்திய வானிலை மையம் தகவல்
Monsoon rain starts on june 1st
டெல்லி:
கேரளாவில் வரும் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 31ம் தேதியன்று, தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
வடமேற்கு, மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் என்று முன்னதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.