ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
கடைசியில் கொரோனாவுக்கு அமெரிக்க மருந்து..! பயன்படுத்தும் சென்னை மருத்துவமனை..!
Chennai govt hospital plans to use corona medicine
சென்னை: கொரோனா பாதிப்புகளுக்கு அமெரிக்காவின் ரெம்டெசிவிர் மருந்தை பரிசோதனை முயற்சியாக பயன்படுத்திக் கொள்ள சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை திட்டமிட்டு இருக்கிறது.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
இந் நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மட்டும் ரெம்டெசிவிர் மருந்தை சோதனை முயற்சியாக நோயாளிகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்த ரெம்டெசிவிர் என்ற மருந்து 31% கொரோனா நோயாளிகளை குணமாக்குவதாக அமெரிக்க சுகாதார துறை ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. சோதனை முயற்சியை தொடர்ந்து, ரெம்டெசிவிர் நல்ல பலனை கொடுத்தால் அதனை பரவலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.