சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….!
Mobile vegetable vehicles allowed in Chennai
சென்னை:
ஊரடங்கு காலம் முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பலர் காய்கறிகள் வாங்குவதாக கூறி இரு சக்கர, 4 சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி கொண்டிருக்கின்றனர். அதனை கட்டுப்படுத்த நடமாடும் காய்கறி அங்காடிகளை சென்னையின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்து நடமாடும் அங்காடிகளை அறிமுகம் செய்தது.
சென்னை மாநகராட்சி சார்பாக, அந்த வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் ஊரடங்கு முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம்.
அத்யாவசிய தேவைகளுக்காக மக்கள் கூடுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சியில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகளுக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை நீட்டிக்கப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார்.