fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

பள்ளிகளை திறக்க மாட்டோம்…! ஆனா பாடங்களை குறைப்போம்…!

Minister sengottaiyan press meet

சென்னை:

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும். தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை.

பள்ளிகள் திறப்பு தாமதமாவதால், பாடங்கள் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இதற்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அது தொடர்பாக ஆலோசனை நடத்தும்.

அதன் பிறகு இது பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி பாடங்கள் குறைப்பது குறித்து இறுதியான முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close