fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

உச்சக்கட்டத்தில் கொரோனா..! தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என தகவல்…?

Lockdown extension may announce today

சென்னை:

தமிழகத்தில் 6ம் கட்டமாக லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

3 மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே செல்கிறது. 5 லட்சம் கொரோனா நோயாளிகள்  இந்தியாவில் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ஐந்து கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளை அதாவது ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசனை செய்து வருகின்றன. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவர் குழுவினர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆலோசனைக்கு பின் அவர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மத்திய அரசும் இன்று அல்லது நாளைக்குள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close