இந்தி மொழியால் கனிமொழிக்கு நேர்ந்த சம்பவம்…! முக்கிய முடிவெடுத்த சிஐஎஸ்எப்!
Local language person in airport duty cisf announced
டெல்லி:
இனி விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்போவதாக சிஐஎஸ்எப் டிஐஜி அனில்பாண்டே வர்கள் தெரிவித்துள்ளார்
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி அவர்களிடம் ‘உங்களுக்கு இந்தி தெரியாதா? நீங்கள் இந்தியரா? என சிஐஎஸ்எப் பெண் அதிகாரி ஒருவர் கேட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இது குறித்து பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந் நிலையில் விமான நிலையங்களில் மொழி சிக்கலை தவிர்ப்பதற்காக இனிமேல் பயணிகளுடன் நேரடி தொடர்பில் உள்ள பதவிகளில் இருப்பவர்கள் உள்ளூர் மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என்று சிஐஎஸ்எப் டிஐஜி அனில்பாண்டே தெரிவித்துள்ளார்.
இதனால் கனிமொழிக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பயணிகளீன் உணர்வுகளை மதித்து கண்ணியத்துடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.