இந்திய அரசு தொடர்ந்து டிஜிட்டல் இந்தியாவின் கனவுகளை ஊக்கத்தொகை, சேவைகள் மற்றும் திட்டங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.இருப்பினும முகநூல் நிறுவனம், கடந்த ஆண்டு ஏற்பட்ட இந்தியாவின் இணைய இடையூறுகளை பற்றி கூறியுள்ளது.2019 ஆம் ஆண்டில் அதிக இணைய இடையூறுகள் ஏற்பட்ட நாடாக இந்தியா மீண்டும் உலகின் மற்ற எல்லா நாடுகளையும் முந்திவிட்டது என்று முகநூல் நிறுவனம் கூறியுள்ளது .
இணைய சீர்குலைவு குறித்த பேஸ்புக்கின் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, ஜூலை – டிசம்பர் 2019 க்கு இடையில் இந்தியா 40 க்கும் மேற்பட்ட இடையூறு சம்பவங்களை எதிர்கொண்டது என்று கூறியுள்ளது.இது 36 வாரங்கள், 6 நாட்கள் மற்றும் 9 மணி நேரம் வரை நீடித்து உள்ளதாகவும் கூறியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஜூன் 17 முதல் செப்டம்பர் 2017 வரை மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் இணைய முடக்கம் 100 நாட்கள் நடந்தது .இது இரண்டாவது பெரிய இணைய சீர்குலைவு ஆகும், இது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களில் நடக்கவில்லை.
ஆனால் ஜூலை – டிசம்பர் 2019 க்கு இடையில் தரவுகளைப் பதிவுசெய்த முகநூல் நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, முசாஃபர்நகர் இணைய முடக்கம் 1 வாரம், 1 நாள் மற்றும் 18 மணி நேரம் வரை நீடித்து உள்ளதாகவும், உ.பி.யில் அசாம், மேகாலயா மற்றும் சஹரன்பூர் ஆகியவையும் ஒரு வாரத்திற்கு மேலாக இதுபோன்ற இடையூறுகளைக் கண்டன எனவும், இந்த பட்டியலில் மீரட், அசாம்கர் மற்றும் உ.பி.யில் அலிகார், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், திரிபுரா மற்றும் பலவும் அடங்கும் எனவும் கூறியுள்ளது .