fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மற்றவர்களை தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு சொல்லித்தரவில்லை – மு.க.ஸ்டாலின் பேச்சு

வடசென்னை தி.மு.க வேட்பாளராக கலாநிதி வீரசாமியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரட்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,

தேர்தல் நடத்தப்படாமல், வாக்குகளும் எண்ணப்படாமல் திமுக-வின் வெற்றியானது நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அவ்வாறு திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மறைவுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

மோடி அமித்ஷா-விடம் அடகு வைக்கும் பொருட்களை மீட்க முடியுமா ? அதிமுக ஆட்சி கோமாநிலைக்கு போய்விட்டது. மற்றவர்களை தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு சொல்லித்தரவில்லை.

நான் தான் கடவுள் என கூறும் முதல்வர்கள் தமிழகத்தில் தான் உள்ளார். வாரிசுகள் என்ற காரணத்தினால் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு தராமல் இருக்க முடியுமா? திமுகவால் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் தகுதியானவர்களா என்று ஆராயுங்கள் , அவர்களின் இரத்த பரிசோதனை செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close