fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

காங்கிரசில் திறமைக்கு மதிப்பே கிடையாது…! ஜோதிராதித்ய சிந்தியா!

Jothiradithya scindia condemns congress

டெல்லி:

சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டுள்ளார், காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பில்லை என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மாநில அரசுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந் நிலையில், சச்சின் பைலட் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்தவரும், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் ராஜஸ்தானில் சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட்டால் ஓரங்கட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்டு உள்ளார். என்னைப்போல எனது சகாவும் துன்பப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை என்பதையே இது காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் சேர்ந்தார். அவருடன் 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கட்சி தாவியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்து பாஜக  ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close