COVID -19 எதிராக நம்மால் வெள்ள முடியும் – ஹர்ஷ வர்தன்
India will Defeat Corona! - Harsha vardhan
COVID -19 க்கு எதிரான போராட்டத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அனைத்து வகையிலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வரும் சில வாரங்களில், இந்த போரை நம்மால் வெல்ல முடியும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் பற்றிய ஒரு கூட்டத்தில் COVID-19 தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதிலளித்தார். அப்போது அவர் தினமும் நாட்டில் 1.5 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி செய்து வருவதாகவும், மே மாதத்தில், “நல்ல தரமான சோதனை கருவிகள் மற்றும் கொரோனா வைரஸைக் கண்டறிவதற்கான கருவிகளையும் நாங்கள் பெறுவோம்” என்றும் அவர் கூறினார்.
COVID-19 போன்ற தொற்றுநோய் நெருக்கடிகளின் போது சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்க அரசாங்கம் சமீபத்தில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இருப்பினும், எல்லாவற்றையும் சட்டத்தின் உதவியுடன் தீர்க்க முடியாது என்று பேசிய அவர், சமூகத்தில் தீங்கு விளைவிக்கும் செயல்களை எதிர்த்துப் போராடுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சி.எஸ்.ஓக்களின் உதவியை நாடியதாகவும் அவர் கூறினார். இதுவரை, ஒன்பது லட்சம் பேர் சமூக கண்காணிப்பில் உள்ளனர் என்றும், இது கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.