fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு ..! கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்தியா!

India starts operation in ladak border

டெல்லி:

கிழக்கு லடாக்கில் சீனா, நேபாள எல்லைகளில் ஆளில்லா விமான கண்காணிப்பை இந்தியா அதிகரித்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லைப் பகுதிகளிலும், சீன ஊடுருவல் ஏதும் இருக்கிறதா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சீனா தாக்குதல் நடத்தினால் பதிலடி நடத்த இந்திய ராணுவத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா தனது சிறப்பு படைகளை   நிறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கில் 4 இடங்களில் சீனா, நேபாள எல்லைகளில் ஆளில்லா விமான  கண்காணிப்பை இந்தியா அதிகரித்துள்ளது. ராணுவம் மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இப்பகுதியில் அதிக கண்காணிப்பு ஆள் இல்லா விமானங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close