RETamil News
தமிழகத்தில் இன்னும் அடுத்து மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் – எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெயிலானது வாட்டி வதைக்கும் நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே காலை 11 மணி முதல் மலை 4 மணி வரை பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.