உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…! சென்னை To டெல்லி புறப்பட்ட முதல் விமானம்
Flight services resumed
சென்னை:
61 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமான சேவைகள் இன்று தொடங்கி உள்ளன. முதல்கட்டமாக உள்நாட்டு விமான சேவைள் இயங்க தொடங்கி இருக்கின்றன.
சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானம் டெல்லி புறப்பட்டது. பயணிகள் வருகை குறைவால் 260 பேருக்குப் பதில் 111 பேருடன் முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது.
மாஸ்க்குடன் கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் பிளாஸ்டிக் மாஸ்க்கையும் அணிந்து பயணிகள் பயணம் மேற்கொண்டனர். விமான பணிப்பெண்களும் உடலை முழுவதும் மறைக்கும் வகையில் முழு கவச உடை அணிந்திருந்தனர்.
பயணிகள் குறைவால் முதல் நாளிலேயே சென்னையிலிருந்து செல்லும் 15 விமானங்களும், சென்னைக்கு வரும் 13 விமானங்களும் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.