GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
டெல்லியில் சேரிப்பகுதியில் திடீர் தீ விபத்து….! 1500 குடிசைகள் எரிந்து சாம்பல்!
fire breaks in delhi slum area
டெல்லி:
டெல்லியில் ஏற்பட்ட தீவிபத்தில் 1500 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் 12.50 மணியளவில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவல் அறிந்ததும் நகரில் உள்ள 30க்கும் மேற்பட்டதீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு சென்றுதீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதற்குள் 1500 குடிசைகள் எரிந்து சாம்பலாகி விட்டன.
இது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், துக்ளகாபாத்தில் உள்ள சேரிகளில் அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுப்படுத்திவிட்டோம். ஆனாலும் 1500 குடிசைகள் தீயில் சேதம் அடைந்துவிட்டன. இழப்பை எவ்வளவு என்பதை இப்போதைக்கு கூற முடியாது என்றனர்.