6 லட்சம் மனுக்கள் இ மெயிலில் அனுப்பி உள்ளோம்…! ஸ்டாலின் டுவிட்…!
DMK leader stalin tweet
சென்னை:
ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் மேலும் 6 லட்சம் மனுக்கள் இ மெயில் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எனவே, மக்களின் கோரிக்கைகளை பெற்று அதை அரசிடம் அளிக்க ஒன்றினைவோம் வா என்ற இயக்கத்தை திமுக தொடங்கியது.
தமிழகம் முழுவதும் பல மக்களிடமிருந்தும் 1 லட்சம் மனுக்களை பெற்று தலைமை செயலாளரிடம் ஒப்படைத்தார் திமுக எம்பி டி.ஆர்.பாலு. அந்த மனுக்களில் கோரிக்கை எதுவும் இல்லை.
உணவு பொருட்கள் பற்றாக்குறை போன்ற சில இருந்தன. அது குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேரடி மனுக்கள் தவிர ஒன்றிணைவோம் வா தளத்திற்கு மின்னஞ்சல் மூலமாக 6 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவறை அரசுக்கு அனுப்பியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள செய்தியில், முதற்கட்டமாக 1லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6லட்ச கோரிக்கை மனுக்களை முதல்வர் உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிணைவோம் வா-வில் வெளியிடப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.