GeneralRETamil Newsதமிழ்நாடு
உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும்….! திமுக எம்பி கனிமொழி பேச்சு!
DMK Kanimozhi speech
சென்னை:
நமது உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி.கனிமொழி, நெல்லை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது புதிய கல்வி பற்றி பேசியுள்ளார். அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை மூலம் சமூக நீதிக்கு எதிரான கொள்கை முன்வைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது: புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள ஆபத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், மொழிக்கு ஆதரவாக போரட்டங்களை முன்னெடுக்க கூடிய சூழல்தான் இப்போது உள்ளதாகவும், நமது உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.