தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதால் 10-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பொது தேர்வை தள்ளிவைக்க்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் கூறியுள்ளார். மேலும் தேர்வு நடத்தப்படும் தேதி பிற ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவது கொரோன நோய் தொற்றின் காரணமாக கடந்த மாதம் 25-ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி, தொழிற் நிறுவனங்கள் என அனைத்தும் ஊரடங்கு உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 12-ஆம் வகுப்பு பொது தேர்வை தவிர மற்ற அணைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 27-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு தேர்வு முற்றிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அந்த தேர்வு நடத்தும் நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்தது.
இது அனைத்திற்கும் முன்னரே 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி என்று மத்திய , மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் +1 வகுப்புக்கான எஞ்சியுள்ள 3 தேர்வுகளையும் ரத்து செய்து அதற்க்காக குறிப்பிட்ட மதிப்பெண்களை அளித்து தேர்ச்சி செய்ய வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-அம் தேதி வரை நீட்டிப்பதின் காரணமாக 10-ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது தெரிவித்துள்ளது. இந்த தேர்வை எப்போது வைப்பது என்பது குறித்த தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.