fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

52 லட்சம் கொரோனா பரிசோதனை மாதிரிகள்…! ஐசிஎம்ஆர் சொன்ன புது தகவல்!

Details of corona testing counting

டெல்லி:

நாடு முழுவதும் 52,13,140 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,996 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.8 லட்சமாக அதிகரித்து உள்ளது.  8,102 பேர் நோயாளிகள் இறந்துள்ளனர்.

அவற்றில் அதிகளவு மகாராஷ்டிராவில் பதிவானவை. 3,483 நோயாளிகள் இறந்துள்ளனர். இந் நிலையில், நாடு முழுவதும் 52,13,140 மாதிரிகள் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் கூறி உள்ளது.

இது குறித்து ஐசிஎம்ஆர் தெரிவித்து இருப்பதாவது: 24 மணிநேரத்தில் மட்டும் 1,51,808 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 6,38,846 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close