GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
டெல்லி ரோகிணி நீதிமன்ற கட்டடத்தில் திடீர் தீ விபத்து..! ஆவணங்கள் சாம்பல்!
Delhi: Fire breaks out at Rohini court
டெல்லி:
டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.
டெல்லி மாவட்ட நீதிமன்றத்தின் 3வது தளத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.
தகவல் அறிந்த 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக போராடிய தீயணைப்பு துறையினர் ஒருவழியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
தீவிபத்தில் 3வது மாடியில் இருந்த நீதிமன்ற கோப்புகள் மற்றும் பல்வேறு விதமான ஆவணங்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகி உள்ளதாக தெரிகிறது.
இந்த தீ விபத்து காரணமாக ஆவணங்கள் முழுமையாக எரிக்கப்பட்டு உள்ளதால் தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.