டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்திய நேரத்தின்படி சுமார் இரவு 9:08 மணியளவில் டெல்லி-NCR மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்திற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சுமார் 10 மணியளவில் இரண்டாவது நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஹரியானாவில் ரோஹ்தக் பகுதியில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனாவால் டெல்லி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.