fbpx
RETamil Newsதமிழ்நாடு
Trending

தமிழகத்தில் இரண்டாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

Coronavirus affects close to two thousand people in Tamil Nadu

இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 570 பேர் சென்னையை சேர்ந்தவர் ஆவர். இதில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1101 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 809 ஆக உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.

இதில் வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 29,797 ஆக உள்ளது. அரசு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 36 ஆக உள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

சென்னையை சேர்ந்த 570 பேரில், 158 பேர் ராயபுரம் பகுதியையும், 94 பேர் திரு வி.க நகர் பகுதியையும், 66 பேர் தண்டையார்பேட்டை பகுதியையும், 56 பேர் தேனாம்பேட்டை பகுதியையும், 54 பேர் கோடம்பாக்கம் பகுதியையும், 53 பேர் அண்ணாநகர் பகுதியையும், 17 பேர் வளசரவாக்கம் பகுதியையும் ,17 பேர் அடையாறு பகுதியையும், 15 பேர் அம்பத்தூர் பகுதியையும், 15 பேர் திருவெற்றியூர் பகுதியையும் ,9 பேர் ஆலந்தூர் பகுதியையும், 3 பேர் மாதவரம் பகுதியையும் ,2 பேர் பெருங்குடி பகுதியையும், 2 பேர் சோளிங்கநல்லூர் பகுதியையும், ஒருவர் மட்டும் மணலி பகுதியையும் சேர்ந்தவராவர்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close