கொரோனா பரவல் எந்தெந்த நாடு பாதுகாப்பானது ? இதோ பட்டியல்
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்படைந்துள்ளன. நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ள நாடுகளில் அதிக அளவில் உயிர் பலிகளும், நோய் தொற்று பரவல் குறைந்த நாடுகளில் குறைந்த உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நோய் தொற்றால் இதுவரை உலகமெங்கும் 1.40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலகின் பாதுகாப்பான நாடு எவை என்ற பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை மிகவும் சிறப்பாக கையாண்டு பொதுமக்களை காப்பாற்றி பாதுகாக்கும் நாடுகளே தற்போது பாதுகாப்பான நாடுகள் என கருதப்படுகிறது.
ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் , எது பாதுகாப்பான நாடு என்பதை பட்டியலிட்டுள்ளது. அதில் தனிமைப்படுத்தப்பட்ட செயல்திறன், அரசாங்க மேலாண்மை திறன் , கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் , அவசர சிகிச்சை தயார்நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் , கொரோனா காலகட்டத்தில் உலகின் மிகவும் பாதுகாப்பான நாடு இஸ்ரேல் என கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 12,855 இருந்தாலும் அவர்கள் திறம்பட செயல்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு அடுத்த இடத்தில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி உள்ளது.அவசர சிகிச்சை தயார்நிலை, கண்காணிப்பு மற்றும் கண்டறிதலுக்காக ஜெர்மனி இஸ்ரேலை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளது.
உலகஅளவில் மட்டுமல்லாமல் , ஐரோப்பாவிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு என்ற பெருமையையும் ஜெர்மனி பெற்றுள்ளது.
கொரோனா பரவல் காலத்தில் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்;
1. இஸ்ரேல்
2. ஜெர்மனி
3. தென்கொரியா
4. ஆஸ்திரேலியா
5. சீனா
6. நியுசிலாந்து
7. தைவான்
8. சிங்கப்பூர்
9. ஜப்பான்
10. ஹாங்காங்
இவ்வாறு வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளது.