fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

திருமழிசை காய்கறிச் சந்தையில் எடப்பாடி…! நேரில் ஆய்வு செய்து அசத்தல்

Chief Minister edapaddi palanisamy inspection

சென்னை: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில்  கொரோனா நோய்த்தொற்றுக்கான  பரவலின் மையம் என்று மாறி இருக்கிறது கோயம்பேடு காய்கறி சந்தை. கோயம்பேடு சந்தையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றவா்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், கோயம்பேடு காய்கறி சந்தையை தமிழக அரசு  மூட உத்தரவிட்டது. சந்தை மூடப்பட்டதையடுத்து, சென்னையை அடுத்த திருமழிசைக்கு காய்கறி சந்தை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யக் கூடிய அளவுக்கு 200 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 20 அடி இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு கடைக்கும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந் நிலையில் திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் புதிய காய்கறி சந்தையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீா்செல்வமும் உடன் இருந்தார்.  ஆய்வின் போது வியாபாரிகளுக்காக தற்காலிக சந்தையில் செய்யப்பட்டு உள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close