RETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு…? ஆட்சியர்களுடன் ஆலோசிக்கும் முதலமைச்சர்!
Chief minister edapaddi palanisamy discussion
சென்னை:
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தேனியிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து இன்று அனைத்து ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி வழியபக அவர் ஆலோசிக்கிறார். கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.