fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்…! எதற்காக தெரியுமா?

Chief minister edapaddi palanisamy advice to banks

சென்னை:

சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிறு குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர்.

தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கொரோனாவில் இருந்து தமிழகத்தில் தான் அதிகம் பேர் குணமடைகின்றனர். பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதற்கு வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம். வங்கிகள் சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டைகளை வழங்க வேண்டும். விவசாயத்திற்கான கடனை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 5 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு உடனடி கடன் தேவை உள்ளது. ஆகையால் கூடுதல் கடன் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close