fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 25 பேர் கொரோனாவுக்கு பலி..!

Chennai today 25 corona patients dead

சென்னை:

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 25 பேர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கையும் 1000ஐ கடந்துள்ளது.

இந்நிலையில்  சென்னையில் கொரோனா பாதித்த மேலும் 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 89 வயது மூதாட்டி உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆயவாளர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 3 பேர் என ஒட்டுமொத்தமாக 25 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close