மலேசியாவில் தவிக்கும் 350 இந்தியர்கள்…! ஹைகோர்ட் காட்டிய அதிரடி
Chennai high court issues on 350 Indians in Malaysia
சென்னை: மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை அழைத்து வரக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கினால் மலேசியாவில் 350 இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் சென்ற அவர்களில் பலரின் விசா காலம் முடிவடைந்து விட்டது. நெருக்கடியான சூழலில் தங்களை இந்தியா அனுப்பி வைக்குமாறு மலேசிய தூதரகத்திற்கு மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே உடனடியாக கால தாமதமின்றி மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது. அந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வழக்கு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனு மீது மே 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு ஆணையிட்டனர்.