போக்குவரத்து ஊழியர்களே..! வேலைக்கு வாங்க..! சென்னை போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு!
Chennai bus transport corporation announcement
சென்னை:
50% ஊழியர்கள் பணிக்கு வருமாறு சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டது. சிறப்பு ரயில் சேவை மட்டும் துவங்கியுள்ள நிலையில் பேருந்து சேவையும் விரைவில் துவங்கும் என்று கூறப்பட்டது.
புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களான கேரள, கர்நாடகாவிலும் பேருந்து சேவை துவங்கியுள்ளது, இந்நிலையில், 2 மாத இடைவெளிக்கு பிறகு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் RC, FC யூனிட்டில் உள்ள 50% பணியாளர்கள் பணிக்கு வர சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் ஆணை பிறப்பித்துள்ளது. பணிக்கு வரும் ஊழியர்கள் மாஸ்க், கையுறை, சானிடைசர் கட்டாயம் பயன்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் பேருந்து சேவை துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.