fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொலை மிரட்டல்…! திமுக எம்பி, மகன்கள் மீது போலீசார் வழக்கு!

Case filed against DMK Mp

நெல்லை:

நெல்லை தொகுதி திமுக எம்.பி ஞான திரவியம் மற்றும் அவரது மகன்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராதாபுரத்தை தாலுகா சங்கனாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமாரி பகவதி. இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் நெல்லை மாவட்ட எஸ்பியை சந்தித்து புகார் அளித்தார்.

அதில், நெல்லை திமுக எம்பியான ஞான திரவியம், எனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். எம்பி மற்றும் அவரது குடும்பத்தினரால் எனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். இதையடுத்து, பழவூர் போலீசார், ஞானதிரவியம், அவரது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close