பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு…! கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை!
Bhavanisagar dam water level increases
ஈரோடு:
தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 அடியில் இருந்து 95 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக விளங்கி வரும் நீலகிரி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 91 அடியில் இருந்து 95 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 39,617 கனஅடியாக உள்ளது. தொடர்ந்து நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.